Montag, 2. Mai 2011

பகுதி-16









சுந்தரத்துக்குப் பணம் அனுப்பிய விடயத்தை கண்ணனுக்குத் தெரிவித்தால் நல்லது என்று யசோ கருதினாள். சுந்தரம் காசு கிடைத்தும் ரெலிபோன் எடுத்து கண்ணனுக்கு அல்லது வேணிக்குச் சொன்னால் குழப்பம் ஏற்படலாம் என்று நினைத்தவளாய் கண்ணனுக்கு விடயத்தைத் தெரிவிக்க ரெலிபோன் எடுத்தாள் யசோ.

மத்தியானம், சாப்பிட்டு கண்ணன் ரிவி பார்த்தபடி, அரைத் தூக்கத்தில் இருந்தான். விஜயும், வேணியும் சமையலறைக்குள் பாத்திரங்கள் கழுவியபடி கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

ரெலிபோன் மணி கேட்டு, வேணி வந்து எடுத்தாள்.

'நான் யசோ கதைக்கிறன்!'

'என்ன...?' ஒற்றைச் சொல்லில் கேட்டாள் வேணி.

'சுகமா இருக்கிறீங்களே...!'

'சுகமில்லாட்டி மருந்து தரப்போறீரே?' குதர்க்கமாகக் கேட்டாள் வேணி.

சிரிச்சுச் சமாளிக்க முயன்றவாறு, வேணியின் குணம் அறிந்த யசோ, 'கண்ணன் நிக்கிறாரே?' என்று கேட்டாள்.

'இல்லை, ஏன்!'

'கண்ணனிட்டை கோகுலன் ஒரு விசயம் சொல்லச் சொன்னவர், அப்ப பிறகு எடுக்கிறன்.'

'ஏன், அண்ணை எடுத்துச்சொல்லக்கூடாதோ? அதுக்கு உங்களிட்டைச் சொல்லி நீங்கள் எங்களுக்குச் சொல்லவேணுமே!'

'ஏன் ரெலிபோன் எடுத்தன்' என்னுமளவுக்கு யசோவுக்குக் கசப்புக் கொட்டியது. மெதுவா சமாளித்து வைக்கலாமென்ற முடிவுடன்,
'சரி, அப்ப வைக்கிறன்!' என்றாள்.

'என்னெண்டு சொல்லுங்கோவன், நான் கண்ணனுக்குச் சொல்லுறன்.'

யசோ பதில் சொல்வதற்கிடையில் தூக்கம் கலைந்த கண்ணன், எழும்பி வந்து, 'ரெலிபோனை இஞ்சை தா!' என்று வாங்கி,
'ஹலோ!' என்றான்.

'கண்ணன் வந்திட்டீங்களா...!' ஆச்சரியத்தடன் கேட்டாள் யசோ.

'இஞ்சைதான் ரிவி பாத்துக்கொண்டு இருந்தனான்.' என்றான்.

வேணி தனக்குப் பொய் சொல்லியிருக்கிறாள் என்று தெரிந்தும், அதைப் பெரிது படுத்தாது, நேரடியா விசயத்தை அவனுக்குச் சொன்னாள்.

'இஞ்சை! சுந்தரத்துக்குக் காசு அனுப்பியிருக்கிறன்.'

'எந்தச் சுந்தரத்துக்கு...?' கேட்டான் கண்ணன். அவன் மூளை இன்னும் அசதிக்குள் இருந்து விடுபடவில்லை.

'உங்கடை தம்பிக்குத்தான், மில் வாங்கக்காசு கேட்டவனெல்லே!' என்று விளக்கமாகப் பதில் கொடுத்தாள் யசோ.

அப்போ,
'உவளோடை உங்களுக்கு என்னப்பா கதை... ரெலிபோனை வைச்சிட்டு வாங்கோ!' என்று வேணி கத்துவது யசோவின் காதில் விழுந்தது.

'விளங்கேல்லை, என்ன... மில் வாங்கவோ?' கண்ணன் திருப்பிக் கேட்டான்.

அவனுக்கு அரைத்தூக்கத்திலிருந்து வந்த குழப்பமும், வேணியின் ஆணையிடுவது போன்ற சொற்களின் அதிரடியும் தொலைபேசி உரையாடலில் சரியாகக் கவனம் செலுத்தமுடியாமல் இருந்தது.

அப்போ யசோ சொன்னாள்,
'கண்ணன், நான் ரெலிபோன் எடுத்தது வேணிக்குப் பிடிக்கேல்லை  போலைக் கிடக்கு! நான் வைக்கிறன், நீங்கள் ஒருக்கா கோகுலனுக்கு ரெலிபோன் எடுங்கோ!' என்று உரையாடலை அரையும், குறையுமாக முடித்துக் கொண்டாள்.

தொலைபேசியை வைத்த கண்ணன், முகத்தைக் கழுவிவிட்டு மீண்டும் ஹோலுக்குள் வந்தான்.

ரிவி ஓடிக் கொண்டிருந்தது.
வேணியும்  விஜயும் பாத்திரங்கள் கழுவி முடித்தும், அங்கேயே நின்றபடி ஊரில் பாடசாலையிலே நடந்த ஏதோ சம்பவம் ஒன்றை சுவாரஸ்யமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

'கோகுலன்ரை கார் ஏதோ சரியில்லையாம், எங்கையோ அவசரம் போகவேணுமாம், அதுதான் நேரமிருக்கோ எண்டு யசோ கேட்கிறா, நான்  போட்டு வாறன்!' என்று வேணியைப் பார்த்துக் கூறியவன், விஜயிடம், 'வாவன் போட்டு வருவம்!' என்று கேட்டான்.

'ம்...ம்...! எனக்குப் பஞ்சியாக் கிடக்கு, நீ போட்டு வா!' என்று மறுத்து விட்டான் அவன்.

'நீங்கள் போறதெண்டாப் போங்கோவன், அவரை ஏன் இழுக்கிறீங்கள்!' என்று உறுக்கினாள் வேணி.

'சரி, அப்ப என்னெண்டு பார்த்துக்கொண்டு வாறன்.' என்று வெளிக்கிட்டான் கண்ணன்.

கண்ணன் புறப்பட்டு சிறிது நேரத்தில் தொலைபேசியடித்தது.

வேணி எடுத்தாள்.
மறுமுனையிலிருந்து சுந்தரத்தின் குரல் ஒலித்தது.
'கொழும்பிலையிருந்து சுந்தரம் கதைக்கிறன். ஆர்... அண்ணியே! அண்ணி, காசு கிடைச்சிட்டுது, இப்பதான் உண்டியல்காரர் கொண்டு வந்து தந்திட்டுப் போறார். உடனை எடுக்கிறன். அண்ணைக்குச் சொல்லுங்கோ! சுகமா இருக்கிறீங்களே...!'

வேணியின் பதிலை எதிர்பாராமலே மளமளவென்று சுந்தரம் சொல்ல,
'என்ன விசயம்... என்ன காசு கிடைச்சது... நாங்கள் அனுப்பேல்லையே... பிறகென்னண்டு இரண்டு இலட்சம் அவனுக்கு உண்டியல்லை போய்க் கிடைக்கும்!' என்று குழம்பிப் போய் நின்றவள், சுகமா இருக்கிறீங்களா என்று கேட்டதற்கு மட்டும் பட்டும் படாமலும், 'ஓ இருக்கிறம்!' என்று பதில் சொன்னாள்.

'அண்ணை இல்லையோ...? நாளைக்கப்பிடி வசதி வந்தவுடனை யாழ்ப்பாணம் போடுவன்... காசை வைச்சுக்கொண்டு இங்கை இருக்கிறதும் கஸ்டம். மற்றது அங்கை போனால் உடனை அலுவல் பார்த்திடுவன்! அண்ணையும், நீங்களும் எங்களுக்குத் தெய்வம் மாதிரி, இந்த உதவியை ஒருநாளும் மறக்கமாட்டன்.' அவள் பதிலை எதிர்பாராமலே, 'சரி அண்ணி, வைக்கிறன்!' என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தான்.

அவன் சொன்ன அன்பான வார்த்தைகள் எதுவும் வேணியின் காதில் விழவில்லை. இரண்டுலட்சம் காசு அனுப்பிய விடயம் மட்டும் தேள் கொட்டியது போல மனதில் அரித்துக் கொண்டிருந்தது.

ரெலிபோனை வைத்துவிட்டு வர, 'என்ன பிரச்சனை?' என்று  கேட்டான் விஜய்.

'எங்கடை வீட்டிலை ஒவ்வொருநாளும் தான் பிரச்சனை... ஏன் மரி பண்ணினன் எண்டு கிடக்கு!'

'சின்னச்சின்ன விசயங்களுக்கெல்லாம் ஏன் பெரிசா ரென்ஸன் ஆகிறீங்கள்...?'

'சின்ன விசயமில்லை விஜய்! இரண்டுலட்சம் ரூபாய் எனக்குத் தெரியாமல், தன்ரை அருமைத்தம்பிக்கு அனுப்பியிருக்கிறார். பாரும்.... ஒரு சொல்லுச் சொல்லேல்லை.' என்று கண்கள் கலங்கினாள் வேணி.

விஜய் அவளருகில் வந்து இருந்து, கையைப் பிடித்து,
'என்ன வேணி.... அழாதையும். கண்ணன் வரவிட்டிக்குக் கேளும்... ஏசும்... இப்ப ஏன் அழுகிறீர்....!' என்றான். அவள் கை அவன் கைக்குள் இருந்தது.

'என்னெண்டு இவர் தம்பியாருக்குக் காசு அனுப்புவர்...! இப்பிடி ஒழிச்சு மறைச்சுத்தான் இவ்வளவுநாளும் எல்லாம் நடக்குது.' என்றாள் வேணி மற்றக்கையால் கண்ணீரைத் துடைத்தபடி.

'உங்களுக்கும், கண்ணனுக்கும் பெரிசா ஒத்துப்போகாது போலைக் கிடக்கு!' என்றான் விஜய்.

'கலியாணம் கட்டின அண்டையிலிருந்து சண்டை தான் விஜய். நான் எதிர்பார்த்த மாதிரி ஒண்டும் இங்கையில்லை. ஏமாந்து போனன்.'

'பிடிக்காட்டி பிறகேன்... இது வெளிநாடு, எத்தினையோ வழியிருக்கு... சிலோன் மாதிரியில்லை.'
'என்ன சொல்லுறீர் விஜய்!'

'நீங்களும், கண்ணனும் பாக்கிற நேரமெல்லாம் சண்டை பிடிக்கிறீங்கள். உங்களுக்குப்; பொருத்தமேயில்லையெண்டு நீங்களே சொல்லுறீங்கள்... கலியாணம் செய்து ஒரு வருசம்கூட ஆகேல்லை... பேசாமல் விட்டிட்டு புதுவாழ்க்கை அமைக்கலாமே எண்டு சொல்லுறன்.'

'எங்கடை கலாச்சாரம் உமக்குத் தெரியும்தானே! கலியாணம் கட்ட முந்தி யோசிக்க வேணும், கட்டின பிறகு கட்டினதுதான், பிறகு விடமுடியாது.'

'என்ன வேணி! இரண்டாயிரமாம் ஆண்டும் பிறந்திட்டுது, பழைய பண்பாடுகளை நினைச்சுப் பயந்து கொண்டிருக்கிறீர்!'

அப்போ கதவு திறக்கும் சத்தம் கேட்டது, அவசரமாக வேணியின் கையை விட்டுவிட்டு தள்ளியிருந்தான் விஜய்.
கண்ணன் உள்ளே வந்தான்.

விஜய் இருப்பதைக் கூட எண்ணாமல், பாய்ந்துபோய் அவன் சேட் கொலரில் பிடித்து,
'என்ன துணிவு உங்களுக்கு...! ஏன் இப்பிடிச் செய்தனீங்கள்?' என்று முகமெல்லாம் கோபம் கொப்பளிக்க ஆர்ப்பரித்தாள்.

கண்ணன் திகைத்துப் போய் நின்றான்.
ஜானகி வீட்டுக்குப் போய் யசோ ரெலிபோனில் கதைத்த விசயத்தைத் தெரிந்து கொண்டு வந்தவன், அவளைக் காணப் போனதுக்குத்தான் கோபாவேசமாக இருக்கிறாள் என்று நினைத்தான்.

'விடும்! சேட்டை விட்டிட்டுக் கதையும்!' என்று தணிவாகச் சொன்னான்.

'செய்யிறதையும் செய்திட்டு நல்லபிள்ளைக்கு நடிக்கிறீங்களோ...' என்று ஆவேசமாக நின்றாள்.

விஜய் கண்டும், காணாமலும் ரிவியைப் பார்ப்பதுபோல அவர்கள் சண்டையை இரசித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு வேணியில் ஒரு கண் இருந்தது. அவளும் இவனுடன் விழுந்து விழுந்து கதைப்பாள். ரெலிபோனில்கூட தினமும் கதைப்பார்கள். இருவரும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இதனால் முன்பே அறிமுகமானவர்கள். இங்கே சந்தித்ததும், ஊர்க்கதை கதைத்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

கண்ணனிடம் வேணி மனம்விட்டுக் கதைப்பதில்லை,  அதற்குச் சந்தர்ப்பமும் வரவில்லை. ஒரு வீட்டில் கணவன் மனைவியாக இருந்தாலும், கீரியும் பாம்புமாக இருந்தார்கள். இருவருக்கும் பொறுமை எண்டது மருந்துக்குமில்லை. இந்த வெறுமை விஜயுக்குச் சாதகமாக அமைந்தது.

இந்த இடைவெளியைப் பயன்படுத்திய விஜய் வேணியின் இதயத்தில் இடம் பிடிக்க நின்றான். கண்ணனுக்கும், இவனுக்கும் முதலே பழக்கம் இருந்தது. வேணியைக்  கண்ணன் கல்யாணம் செய்தபின் அடிக்கடி வந்து போனான். அவர்கள் வீட்டில் நடக்கும் அத்தனை தில்லுமுல்லும் அவனுக்குத் தெரியும்.

சேட் கொலரை இறுக்கிப் பற்றியிருந்த வேணியின் கையை விடுத்து, அவளைத் தள்ளிப் பின்னால் விட்டவனாய்,
'அப்பிடி என்ன செய்து போட்டன், கதைக்கிறதெண்டா மெதுவாக்கதை! சண்டைக்காரியள் மாதிரி ஏன் நிக்கிறாய்!'

'சண்டைக்காரியோ...!'
'வேறை என்னண்டு உன்னைச் சொல்லுறது...!'

'சொல்லத்தெரியாட்டி வாயை மூடிக்கொண்டிருங்கோ!'

'முதல் நீ உன்ரை வாயை மூடு! என்ன நடந்ததெண்டு கேட்டிட்டு விளங்கிக்கொண்டு கதை!'

'என்ன நடந்தது... உங்கடை செல்லத்தம்பிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் அனுப்பியிருக்கிறீங்கள்! ஆரைக்கேட்டு அனுப்பினனீங்கள்?'

'நான் அனுப்பேல்லையே!'
'முழுப்பூசனிக்காயைச் சோத்துக்கை புதைக்கப் பாக்கிறீங்கள்!'

'இங்கை ஒருத்தரும் ஒண்டையும் மறைக்கேல்லை. நீதான் ஏதும் காரணமொண்டைத் தூக்கிக் கொண்டு அலையிறாய்.'

'என்னப்பா கதைக்கிறீங்கள், உங்கடை தம்பி எடுத்துத் தன்ரை வாயாலை சொல்லுறான். நீங்கள் அனுப்பின காசு கிடைச்சது, ஊருக்குப் போய் மில் வாங்கப்போறன் எண்டு... நான் கேட்டது பொய்யே...?'

'நீ கேட்டது பொய்யில்லை. காசு தம்பிக்குக் கிடைச்சது உண்மை, ஆனால் நான் காசு அனுப்பேல்லை. கோகுலன் அனுப்பியிருக்கிறான்.'
'அவன் ஏன் அனுப்பப்போறான்...? சும்மா ஏன் அவனைச் சாட்டுறீங்கள்! இல்லாட்டி நீங்கள் அவனிட்டைக் காசைக் குடுத்து அனுப்பச்சொல்லியிருப்பீங்கள்!'

'இதுக்கு மேலை என்னாலை பதில் சொல்ல முடியாது. நீ என்னெண்டாலும் செய்!' என்ற கண்ணன்  சமையலறைக்குள் போய் யூஸ் எடுத்து ஊற்றியவாறு, விஜயைப் பார்த்து, 'யூஸ் குடிக்கப்போறியே?' என்றான்.

'வேண்டாம் கண்ணன்!' என்று விஜய் மறுத்துவிட்டான்.

'அண்ணையைக் கேட்டிட்டுத்ததான் மிச்சம்!' என்று கண்ணனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தொலைக்காட்சியில் கண்களைச் செலுத்தினாள் வேணி.

அவைக்கு எப்பவும் காசு அவசரம்இவ்வளவுநாளும் இவர் கொட்டினது பத்தாதெண்டுஇப்ப உன்னட்டையும் கேக்கத் தொடங்கியிட்டினம்.'

'அவன் என்னட்டைக் கேக்கேல்லைஅவசரத்துக்கு உதவவெண்டு அனுப்பினனான்வாயை மூடிக்கொண்டிரு!' என்று உறுமினான் கோகுலன்.

'ஏன் நான் வாயை மூடிக்கொண்டிருக்கவேணும்ஊருக்குக் குடுக்கிறதை எனக்குத் தரலாம்தானே!'

'வேணி!' என்று அதட்டினாள் ஜானகி.

'என்ன...!'

'அவையின்ரை குடும்பவிசயத்திலை நீ  ஏன் தலையிடுகிறாய்..? உன்ரை வேலையைப் பாத்துக்கொண்டு அடக்கமா இருக்கப் பார்!'

'இவருக்கு அடக்கமா இருக்கட்டோ..! ஏன் இவருக்கு இருக்கிற உரிமை தானே எனக்கும் இருக்கு!'

'இல்லையெண்டு ஆரோ சொன்னவையோ....! சும்மா வாயைக் காட்டிக்கொண்டு நிக்கிறாய்!' என்று கண்டித்தாள் ஜானகி.

'உண்மையைச் சொன்னா வாய் காட்டுறன் எண்டுறியள்எனக்கென்ன ஆரெண்டாலும் என்னெண்டாலும் செய்யட்டும்.' என்று முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள் வேணி.


                      ----------


ஜானகி வீட்டுக்கு வந்த கோகுலன்யசோ வீட்டில் இல்லையென்று தெரிந்து கொண்டு ஜானகியிடம்,
'அக்கா!' என்று கூப்பிட்டுவிட்டு தயங்கினான்.

'என்னடா...!' என்றாள் ஜானகி.

'இனி எனக்குக் கலியாணம் பேச வேண்டாம்.'

'ஏன்...? டேய்கோகுலன் பேசிற கலியாணம் குழம்பிக்குழம்பிக் கொண்டு போகுதெண்டு யோசிக்காதைஉனக்கெண்டு ஒருத்தி இல்லாமலே போவாள்.'

'அக்கா....!'

'ஜானகி அவன் ஏதோ சொல்லத் தயங்குகிறான் என்பதை விளங்கிக்கொண்டு பொறுமையாக அவனைப் பார்த்தாள்.
'அக்காயசோவைக் கேக்கிறியே!'

ஜானகி உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு அவனருகில் வந்து முதுகைத் தடவியபடி,

'அவளுக்;கு உன்னிலை நல்ல விருப்பம்கேக்கிறன்ஆனால் அவளைப் பற்றி உனக்கு முழுசாத் தெரியும்தானே!'

'தெரியும்... உன்னைவிட கொஞ்சம் அதிகமாகத் தெரியும்.'

'வரட்டும்நான் கேக்கிறன்!' என்றாள் ஜானகி சந்தோசம் கண்களில் விரிய.

'நான் போயிட்டுப் பேந்து வாறன்... நீ வேலையைச் செய்நான் டிஸ்ரேப் பண்ணேல்லை!' என்று சொல்லி வெளியே நடந்தான் கோகுலன்.
                     ----------

கோகுலன் தங்கை வேணி வீட்டுக்குப் போனான்கண்ணன்விஜய்வேணி மூவரும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
'ரீ குடியன் அண்ணை!' என்றாள் வேணி.

'தாவன்உன்ரை கையாலை ரீ குடிச்சா அம்மான்ரை  கையாலை குடிச்ச மாதிரி இருக்கும்!' என்;றான் கோகுலன் சிரிப்போடு.

'எப்ப பாத்தாலும் உனக்கொரு நக்கல்... என்ன?' என்றபடி தேநீரை ஊற்றிக் கொடுத்தாள்.

'வேலையெல்லாம் எப்பிடி...?' கண்ணனைப் பார்த்து விசாரித்தான்.

'பறவாயில்லைஎண்டாலும் முந்தினமாதிரியில்லைமுன்னும் பின்னும் மைஸ்ரார் திரியிறதிலை ஐஸ் அடிக்கேலாது.' என்று பதில் சொன்னான் கண்ணன்.

விஜய் பக்கத்தில் இருந்தான்அவனையும் ஏதாவது விசாரிக்க வேணுமே என்று,
'பழைய வீட்டிலைதானே  இருக்;கிறீர்!' என்று கேட்டான்.

'அதுக்குக் கிட்டத்தான்  வேறை வீடு மாறியிருக்கிறன்!' என்றான் விஜய்.

'இஞ்சைதாமோதரன் காசடிக்கிறார்... அவரோடை பங்காச் செய்யிறதை விடப்பார்என்றாள் வேணி.

கோபம் கண்களில் தெறிக்க அவளைப் பார்த்தான் கோகுலன்.

'ஏன் கோவிக்கிறாய்... உண்மையைத்தான் சொல்லுறன்ஒவ்வொரு நாளும் நூறுஇருநூறு மார்க் குறையுது!'

'நீ வேலைக்குப் போனால் உன்ரை வேலையைப் பாத்திட்டு வாஅந்தாள் பதினைஞ்சு வருசமாக் கடை நடத்துறார்அவரிலை பிழை பிடிக்காதை!' என்று அவள் வாயை மூடப் பார்த்தான் கோகுலன்.

'அவர் தன்ரை கடையைப் பாக்கட்டுமன் அண்ணைநாங்கள் எங்கடை கடைஅலுவல்களைப் பாப்பம்.' என்று அவள் கேட்டாள்.

'நாங்கள் எண்டால்...! வேணிஅது தாமோதரமண்ணையின்ரை கடைசிநேகிதத்துக்காக என்னை அவர் பங்காச் சேர்த்திருக்கிறாரே தவிரஅந்தக் கடைக்கு நான் போனதுமில்லைபிஸ்னஸ் செய்ததும் இல்லைநீ அண்ணைஅண்ணையெண்டு முன்னும்பின்னும் திரிஞ்சு கேட்டதிலை பாவம் எண்டு உனக்கு அங்கை வேலை எடுத்துத் தந்திருக்கிறன்போனா அந்த அலுவலைப் பார்த்திட்டு வாஇல்லாட்டிப் பேசாமல் வீட்டிலை இரு!'

கண்ணனோவிஜயோ அண்ணன்தங்கச்சியின் இந்த உரையாடலில் கலந்து கொள்ளவில்லைஅவர்களே கதைத்துத் தீர்க்கட்டும் என்று இருந்தனர்.

அப்போ வேணி சொன்னாள்.
'நீ இப்பிடியே பாராமுகமா இருஅவை இலாபத்தை எல்லாம் சுருட்டிக்கொண்டு போகட்டும்.'

'எனக்குத் தாமோதரன் அண்ணையைத் தெரியும்நேற்றோஇண்டைக்கோ அவர் எனக்குப் பழக்கமானவரில்லைஅத்தான்அக்காவையின்ரை பழைய பிரண்ட்... ஆபத்துக்கு உயிரையும் குடுக்கக்கூடிய மனிசன்.'

'அவர் அப்பிடியிருக்கலாம்முழுநேரமும் அவரே கடையிலை நிக்கிறார்...? மகள் நிக்கிறா... மனிசிக்காரி நிக்கிறா... ஐம்பதுநூறு எண்டு மடியிக்கை செருகினால் தெரியவே போகுது?'

'ஏன் இப்பிடி நினைக்கிறாய்நம்பிக்கைதான் வாழ்க்கைஒருதனை ஒருதன் நம்பித்தான் உலகமே ஓடுதுநம்பிக்கை இல்லாட்டி ஒண்டுமே செய்யேலாது.'

'நான் கண்ணாலை கண்டதைச் சொல்லுறன்அதை நம்பாமல் சும்மா தத்துவம் சொல்லிக்கொண்டு நிக்கிறாய்உனக்கு மண்டைக்கை யசோவின்ரையும்தண்ணிக்கூட்டத்தின்ரையும் எண்ணம்தான் ஒழியகடையைப் பற்றிக் கடுகளவு நினைப்பும் இல்லை.'

கோகுலனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
'உன்ரை வாயிலை ஒரு நாளும் நல்ல வார்த்தையே வராதாதங்கச்சியெண்டு வந்து எங்களுக்குப் பிறந்தாய்!' என்று உறுமிவிட்டு வெளியேறினான்.

கண்ணனுக்கு மறிக்க மனம் உந்தியபோதும் வேணி கதைத்த கதைக்கு ஆருக்குத்தான் கோபம் வராது என்று நினைத்தவனாய், 'இப்ப போகட்டும்ஆத்திரம் தணிய ரெலிபோனில் கதைக்கலாம்என்று மௌனமாக நின்றான்.
                     ----------
ஜானகி வீட்டில்யசோ வேலையால் வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்ஜானகி அவளுக்கு வேண்டாம்... வேண்டாமென்று சொல்லக் கறிகளைப் போட்டாள்.

'என்னக்கா நீங்கள்... இவ்வளவும் ஆர் சாப்பிடுகிறது?'
'சாப்பிடுசாப்பிடு!' என்ற ஜானகி,
'கோகுலன் தனக்கு இனிமேல் கலியாணம் பேச வேண்டாமாம்!'
'ஏன்...!'

'அவன் ஒரு பிள்ளையை விரும்புறானாம்.'

யசோ பதில் பேசாமல் ஜானகியைப் பார்த்தாள்.

'உன்னைக் கேட்கச் சொன்னவன்!' என்றாள் ஜானகி மொட்டையாக.

கண்களில் ஒளி மிளிரமீண்டும் அவள் ஜானகியை நோக்கி விளங்காதவள் போல, 'ம்என்றாள்.

'உன்னை விரும்புறானாம்கேட்கச் சொன்னவன்.... என்னடி!' என்றாள் ஜானகி.
யசோ ஒருகணம் திகைத்துப் போய் நின்றான்அவள் நெஞ்சு மகிழ்ச்சியில் படபடத்தது.

'இரவைக்கு வந்து கேட்கப்போறான்யோசிச்சுச் சொல்லு!'

'அக்காகோகுலனுக்கு நான் எப்பிடிப் பொருத்தம்... அவருக்கு... எத்தினை நல்ல பிள்ளையள் இருக்கினம்.... ஒருத்தியைப் பார்த்துச் செய்து வைக்கிறதுக்கு... நான் வருத்தக்காரி... இன்னொருத்த னுக்குக் கலியாணம் பேசி வந்தவள்... என்னைப் போய் அவருக்கு...!'

'அதொண்டும் பிரச்சனையில்லைஉன்னை மனைவியா அடையகோகுலன்  குடுத்து வைக்கவேணும்.'

'ஏனக்கா அப்பிடிச் சொல்லுறீங்கள்செல்லமாகக் கோபித்தாள்.

'உன்னை மாதிரி வடிவானஒழுக்கமான பொம்பிளை கிடைக்க கோகுலன் மட்டுமில்லைஆரெண்டாலென்ன குடுத்து வைக்க வேணும்.'

'அதில்லை அக்கா...!'

'அக்கா... அக்கா எண்டு சொல்லுறதை விட்டிட்டுஇனி மச்சாள் எண்டு சொல்லப் பழகிக்கொள்!'

'எப்பிடியெண்டாலென்ன எனக்கு நீங்கள் தெய்வம்இல்லாட்டி நான் இண்டைக்கு இருந்த இடமும் தெரியாமல் போயிருக்கலாம்.'

'ஏன்டி அப்பிடிச் சொல்லுறாய்கடவுள் கை கட்டிக்கொண்டு சும்மா இருக்கப் போறாரே.... எல்லாம் அவன் அருள்!'
'ஆனால் அக்கா வேறை ஆரையும் செய்து குடுங்கோ!'

'ஏன்...? அவனுக்கு உன்னைப் பிடிச்சிருக்குஉனக்கும் அவனைப் பிடிக்காமலில்லை... பிறகேன்...!'

'பிடிச்சிருந்தால் மட்டும் போதுமா... அக்கா நல்ல மனைவியாவும் இருக்க வேண்டாமே?'

'ஏன்... நீ நல்ல மனைவியா இருக்கமாட்டியோஏனடி யசோ உன்னைப்பற்றித் தேவையில்லாமல் நீயே குறைவா நினைச்சுக் கொண்டிருக்கிறாய்இனி என்னண்டாலென்ன அவனோடை கதைச்சுக் கொள்!'
'அவரோடை கதைக்க முடியாது.'
'ஏன்....!'

'கதைக்க விடமாட்டார்... ஏதாவது சொல்லி என்ரை வாயை மூடி விடுவார்அக்கா பிளீஸ் ஏதாவது சாட்டுச்சொல்லி... இல்லாட்டி உள்ளதைச் சொல்லுங்கோவன்அக்கா எண்டு இருக்கிற நீங்கள் உங்கள் தம்பிக்கு ஒரு வருத்தக்காரியை எப்பிடியக்கா கட்டிக் குடுக்க நினைப்பீங்கள்?'

'இப்ப நீ என்னட்டை அடிவேண்டப்போறாய்என் திரும்பத் திரும்ப வருத்தக்காரி எண்டுகொண்டு இருக்கிறாய்.'
'உண்மையைத் தானே சொல்லுறன்!'

'என்ன உண்மை...? வருத்தம் வாறதுமாறுறது எல்லாருக்கும் பொதுவானதுநீ மட்டும்தான் இந்த உலகத்திலை ஒரு வருத்தக்காரியெண்டு சொல்லிக்கொண்டு நிக்கிறாய்!'

'அக்காவருத்தம் மட்டுமேஏமாற்றப்பட்டு தெருவில் விடப்பட்டவளும் எல்லேஎன்னைப் போய் நீங்கள்... என்னக்கா!' என்று மறுத்துரைத்தாள் யசோ.

'அதுதான் சொல்லுறன்அவனோடை கதைச்சுக்கொள்ளெண்டு!' என்று பதில் கொடுத்தாள் ஜானகி.




Keine Kommentare: